Spread the love

மண்டபம் நவ, 28

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாளை கடற்கரை சாலையில் மரைன் காவல்துறையினர் வாகன சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை சோதனையிட்டனர். அதில் கீழக்கரை சங்குலிக்கார தெருவை சேர்ந்த
சம்சுதீன் என்பவரின் மகன் ஜெயினுதீன் (முன்னாள் கீழக்கரை நகர்மன்ற உறுப்பினர்) மற்றும் கீழக்கரை 19 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சார்பாஸ் நவாஸ் இருவரும் இருப்பது இருந்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் விசாரணை செய்த பொழுது சுமார் 12 கிலோ அளவுள்ள 30 கேன்களில் நிரப்பப்பட்ட உரத்தை வேதாளையைச் சேர்ந்த சாதிக் அலி என்பவரது நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு கடத்த கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மண்டபம் மரைன் காவல் துறையினர் வாகனத்தை சோதனை செய்து மேற்படி பொருட்களுடன் குற்றவாளிகளை கைது செய்து தற்போது மண்டபம் மரைன் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜான் பீட்டர்.
செய்தியாளர்.
ராமேஸ்வரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *