நத்தம் நவ, 26
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரெட்டியப்பட்டி ஊராட்சி சார்பில் நாய்களுக்கான வெறி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. இதற்கு ரெட்டியபட்டி ஊராட்சி தலைவர் சாத்தி பவுர் தலைமை தாங்கினார். நத்தம் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் முருகானந்தம் தலைமையிலான மருத்துவ குழு 35 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
ஊராட்சி செயலர் செந்தில் குமரன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். முன்னதாக வத்திபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய் கடித்தால் செய்ய வேண்டி முதலுதவியை தொடர்ந்து அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு வழங்கினர். இதில் மருத்துவர் ஷில்பா சார்லஸ், சுகாதார ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.