சென்னை ஆகஸ்ட், 8
அதிமுக. பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதற்கு இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து முடிவு செய்ய இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை பரிசீலித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை 2 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வருகிறது. 2 வாரத்தில் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வழக்கு விசாரணை இன்று முதல் தொடங்குகிறது.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in