நாமக்கல் ஆகஸ்ட், 7
நாமக்கல் நகராட்சி மண்டபத்தில் கைத்தறி துறை சார்பில் கைத்தறி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இங்கு சங்ககிரி, எடப்பாடி பகுதியை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் துணிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 45 அரங்குகள் அமைக்கப்பட்டு பட்டுசேலை, காட்டன் சேலைகள், வேட்டிகள், போர்வைகள், ஜமக்காலம், துண்டு, சால்வை, கால் மிதியடிகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இக்கண்காட்சி இன்று மாலை 6 மணி வரை நடைபெற உள்ளன. கைத்தறித்துறை திருச்செங்கோடு சரக உதவி இயக்குநர் செந்தில்குமார், கைத்தறி அலுவலர்கள் பூபதி, அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in