திருப்பூர் நவ, 24
திருப்பூர் மாவட்டம் பல்லடம் உட்கோட்டம் பல்லடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணபதிபாளையம் பகுதியில் வசித்து வரும் பார்த்திபன்(32) என்பவர் கடந்த மாதம் 14 ம் தேதி இரவு 07.30 மணி அளவில் சென்னிமலைபாளையத்தில் உள்ள ஊசு கார்மெண்ட்ஸ் மைதானத்தில் தனது சகோதரர் ஜெயபிரகாஷ்; என்பவருடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த விக்னேஸ்வரன்(26), சதீஷ்குமார்(19) மற்றும் கனகராஜ்(20) ஆகியோர் மேற்கண்ட பார்த்திபன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோரை தகாத வார்த்தையால் திட்டியும் அடித்தும், கத்தியை காட்டி மிரட்டி 1000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த பார்த்திபன் என்பவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்து கொண்டு கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர். வழக்கின் விசாரணையில் மேற்கண்ட எதிரிகள் பார்த்திபனை கெட்டவார்த்தையால் திட்டியும், அடித்தும் காயப்படுத்தியது தெரிய வந்தது.
அதனையடுத்து வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பல்லடம் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேற்கண்ட குற்றவாளிகள் விக்னேஸ்வரன் என்பவரின் மீது வழிப்பறி வழக்கு, அடிதடி வழக்கு, கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு ஆகியவை உள்ளன. எனவே விக்னேஸ்வரன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசாங் சாய் பரிந்துரையின் பேரில் குற்றவாளி விக்னேஸ்வரன்(26) என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தடுப்புக் காவலில் வைப்பதற்கான ஆணையை பிறப்பித்தார்கள். அதன்படி பல்லடம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சௌமியா அவர்கள் கோவை மத்திய சிறையில் இருந்த விக்னேஸ்வரன்(26) என்பவரிடம் தடுப்புக்காவல் ஆணையை நடைமுறை செய்தனர்.
A.மருதமுத்து.
செய்தியாளர்.
திருப்பூர் செய்திப் பிரிவு.