தருமபுரி நவ, 24
காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றினை அரசு முதன்மை செயலாளரும், தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அதுல் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது தருமபுரி கோட்டாட்சியர் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா, காரிமங்கலம் வருவாய் வட்டாட்சியர் சுகுமார், தொழிலாளர் நல உதவி ஆணையர் முத்து, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.