திருப்பத்தூர் நவ, 18
திருப்பத்தூர் மாவட்டத்தில் நக்ச லைட்டுகள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தாசில்தார்கள், மண்டல தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு காவல்துறை சிறப்பு அதிரடிப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சசிகுமார் காணொளி காட்சி மூலம் நக்சலைட்டுகள் உருவா காமல் எவ்வாறு தடுக்க வேண்டும் மற்றும் இடதுசாரி நக்சல்கள் எவ்வாறு உருவாகிறார்கள் என்றும் விளக்கம் அளித்தார்.
இதில் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, தாசில்தார் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.