Spread the love

சிவகங்கை நவ, 16

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக நேற்று “தேர்தல் வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு பாட்டுப்போட்டி” நடைபெற்றது.

இப்போட்டியில் மாணவிகள் கலந்துகொண்டு தேர்தலில் 100% வாக்களிப்பு, வாக்களிக்க பணம் பெறக்கூடாது, வாக்களிப்பதன் அவசியம் உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய பாடல்களை பாடினர்.

சிறப்பாக பாடல் வரிகள் அமைத்து, பாடிய மாணவிகளின் பெயர்கள் இளையான்குடி, வட்டாட்சியர்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்துகொண்ட மாணவியரையும், நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முஹம்மது, அப்ரோஸ் மற்றும் சேக் அப்துல்லா ஆகியோரையும் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *