Spread the love

ராணிப்பேட்டை நவ, 12

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அளித்துள்ள மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சோளிங்கர் சட்ட மன்ற உறுப்பினர் முனிரத்தினம் மற்றும் அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் ரவி ஆகியோர் வழங்கியுள்ள 10 மனுக்கள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்து துறைகள் தங்களின் தலைமை இடத்திற்கு அறிக்கையை முறையாக தயார் செய்து வழங்கிட வேண்டும் எனவும், அனைத்து திட்டங்களும் அரசின் மூலம் ஒப்புதல் பெரும்படியாக முழு மையாக ஆராய்ந்து என்ன பிரச்சினைகள் அதனை நிவர்த்தி செய்வதால் பொது மக்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துறைச்சார்ந்த அலுவ லர்களை கேட்டுக் கொண்டார்கள்.

மேலும் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *