அரியலூர் நவ, 8
அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர் கண்ணன், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.