Spread the love

திருமலை நவ, 6

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் பணம், தங்கத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் செய்கிறது. ஆனால், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் என்ற பெயரில் மாநில அரசிடம் தங்கத்தை அடகு வைப்பதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.இதற்கு பதிலளித்த தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் தர்மாரெட்டி, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் மீது யாரோ சிலர் தவறான செய்தியைப் பரப்புவது ஏற்றதல்ல என்று எச்சரித்தார்.தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தங்கம் மொத்தம் 10,258.37 கிலோ கிராம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் ஏழுமலையானின் ரொக்க டெபாசிட் வெகுவாக அதிகரித்துள்ளது. 2019-ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி ரூ.13,025 கோடி ரொக்கம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. தற்போது ரூ.15,938 கோடி ரொக்கம் டெபாசிட் உள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *