Spread the love

அரியலூர் நவ, 2

ரேஷன் கடையை முற்றுகை அரியலூர் நகராட்சியின் 15வது வார்டில் கீழத் தெருவில் ஒரு ரேஷன் கடை உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கடையில் 1,414 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. அரியலூர் நகரிலேயே அதிக ரேஷன் அட்டைகள் கொண்டதாக இந்த கடை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ரேஷன் கடை செயல்படும் கட்டிடத்தில் மழைக்காலங்களில் நீர் கசிவதாக கூறி, இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியானது. நேற்று அந்த கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களுக்கு, அந்த கடை இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரியவந்ததையடுத்து, கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *