புதுச்சேரி நவ, 1
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. புதுவை அரசு சார்பில் 100 அடி சாலையில் உள்ள அவரின் சிலைக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம், பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை நடந்தது. 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சட்ட மன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.