கரூர் அக், 27
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆய்வு செய்தனர்.
மேலும் வலையல்காரன்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்வதை பார்வையிட்டு, உணவின் தரம் மற்றும் சுவையினை தெரிந்துகொள்ள குழந்தைகளோடு அமர்ந்து உணவு அருந்தி ஆய்வு செய்தார்கள்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.