Spread the love

நியூயார்க் அக், 18

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ், அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்தார்.

போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமராக இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா வரும் ஐநா பொது செயலாளர் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்கிறார்.

மேலும் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள அண்டோனியோ குட்டரெஸ் இந்தியா வருவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *