திருச்சி செப், 27
கடந்த ஒரு வாரமாக பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பகலில் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் திடீரென கருமேக கூட்டங்கள் வானில் திரண்டு ஆங்காங்கே சாரல் மழை பெய்தது.
பின்னர் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் தொடங்கிய மழை விடிய விடிய பெய்ததோடு காலை 7 மணி வரை நீடித்தது. நள்ளிரவில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டதுபோல் இடி, மின்னலுடன் 5 மணி நேரத்துக்கும் மேல் கொட்டித்தீர்த்த இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடியது.
தற்போது பெய்த மழையால் அந்த மண் பாதைகள் எல்லாம் சேறும், சகதியுமாக மாறிவிட்டன. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாமலும், இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த அவதியை போக்க மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதிகளில் கருங்கல் ஜல்லி மற்றும் பாறை மணல் அடித்து செம்மைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். சோமரசம்பேட்டை அருகே வயலூரில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக சுமார் 60 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.