டெல்லி செப், 24
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அக்டோபர் 19 ம்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம்.
2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகினார். இதையடுத்து சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் தேவை என்று மேலிடத்தை விமர்சனம் செய்து கபில் சிபில், குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கடசியில் இருந்து விலகினார்கள். இதைத்தொடர்ந்து கட்சியை வலுப்படுத்துவதற்காக ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் 30 ம்தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 ம்தேதி பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8 ம்தேதி கடைசி நாளாகும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் போட்டியிட்டால் அக்டோபர் 17 ம்தேதி தேர்தல் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து காங்கிரஸ் தலைமை அலுவலகங்களிலும் தேர்தல் நடைபெறும்.
மேலும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.