Spread the love

காஞ்சிபுரம் ஆகஸ்ட், 2

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து 232 மனுக்கள் பெற்றப்பட்டது. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மண்டலம் வையாவூரை சேர்ந்த 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#Vanakambharatham#grievanceday#Kancheepuram#news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *