நாமக்கல் செப், 15
பூங்கா சாலையில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தமிழ்நாடு மக்கள் நல சேவை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ஈஸ்வரி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈஸ்வரி பேசும் போது, நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வீட்டுமனை பட்டா இல்லாமல் வாடகை வீடுகளில் வசித்து வரும் ஏழை, எளிய பெண்களிடம் இலவச வீட்டுமனைக்கான விண்ணப்பங்களை பெற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக கொடுத்துள்ளோம். கடந்த 4 மாதங்களில் மட்டும் சுமார் 700 மனுக்களை கொடுத்து இருக்கிறோம். இதற்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.