சென்னை செப், 10
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார்.
இந்நிலையில் கன்னியாகுமரி முளகுமூடு பகுதியில் இருந்து 4-வது நாள் நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். இன்றுடன் தமிழகத்தில் பாதயாத்திரையை முடித்துகொண்டு கேரளா செல்கிறார் ராகுல் காந்தி. நாளை கேரளாவில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார்.