தூத்துக்குடி செப், 7
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய் மற்றும் சாலை பணிகள் நடந்து வருகிறது. கடந்த காலங்களை போல் இல்லாமல் இந்த முறை நகருக்குள் முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் தூத்துக்குடி பண்டுக்கரை சாலையில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலைப்பணிகளையும், கருத்த பாலம் அருகில் புதிய கான்க்ரீட் சாலை மற்றும் பாதாளச் சாக்கடை பணிகளையும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி உதவி பொறியாளர் காந்திமதி, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் வான்மதி, மாநகராட்சி கவுன்சிலர் பொன்னப்பன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.