Spread the love

நெல்லை செப், 6

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தின விழா கலையரங்கில் நடந்தது. ஐ.ஐ.பி. பள்ளியின் தாளாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார்.

இவ்விழாவிற்கு மேலப்பாளையம் அல் மதினா சி.பி.எஸ்.இ. பள்ளியின் தாளாளர் எம்.கே.எம்.கபீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் நல்லொழுக்கம், நல்ல சிந்தனை, விடாமுயற்சி ஆகியவற்றை கடைபிடித்து வாழ்வில் உயரவேண்டும் என்று பேசினார்.

மேலும் தன்னுடைய உயர்ந்த நிலைக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்று கூறி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஐ.ஐ.பி. பள்ளியின் தாளாளர் அனந்தராமன் தன்னுடைய தலைமையுரையில் பாரதியாரின் சிறுகதை ஒன்றை கூறி அதன் மூலம் ஆசிரியர்களின் சிறப்புகளை மாணவர்கள் புரியும்படி எடுத்துக்கூறினார்.

இதனைத் தொடர்ந்து பள்ளியின் இயக்குனர் ராஜ்குமார் கலந்து கொண்டு அனைத்து ஆசிரியர்களையும் பாராட்டி ஆசிரியர் தின வாழ்த்துக்களை கூறினார். முன்னதாக மாணவி சிவரஞ்சனி வரவேற்றார். மாணவி ரம்யா ஆங்கில உரையாற்றினார். மாணவி அபிநயா ஆசிரியர்களை பாராட்டி கவிதை வாசித்தார். மாணவி நாகஜோதி தமிழ் உரையாற்றினார். முடிவில் மாணவன் ஹரிஷ் சண்முகம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் இந்துமதி, துணை முதல்வர் சாந்தி, அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *