டெல்லி செப், 5
காங்கிரசில் இருந்து வெளியேறியுள்ள குலாம்நபி ஆசாத், புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். கட்சியின் செயல் திட்டத்தையும் வெளியிட்டார்.
மேலும் குலாம்நபி ஆசாத் ராஜினாமா காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டு காலம் பணியாற்றியவர், அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் . இவர், காஷ்மீர் முதலமைச்சர் காங்கிரஸ் பொதுச்செயலாளர், மத்திய அமைச்சர், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் என பல பதவிகளை வகித்தவர் ஆவார். ராகுல் காந்தி மீது சரமாரியாக குற்றம்சாட்டி, கடந்த 26 ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் பலரும் காங்கிரசில் இருந்து வெளியேறினார்கள்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில் ஜம்முவில் சைனிக் காலனியில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் நேற்று ஜம்மு விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, அங்கே பெருமளவில் திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்ட மைதானத்துக்கு அவரை ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். அதைத்தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய குலாம்நபி ஆசாத் புதுக்கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.