சென்னை நவ, 23
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். அமலாக்கத்துறை சார்பில் தடவியல் துறை கணினி பிரிவு உதவி இயக்குனரிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.