சென்னை செப், 19
தமிழகத்தின் வட மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு பரவலாக மழை பெய்துள்ளது. தொடர்ந்து காலையிலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்திய நிலையில் தற்போது மழை பெய்தது மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.