சென்னை ஆக, 11
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க பட்டியலில் திருத்தம் செய்வதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .ஆகஸ்ட் 20 முதல் அதிகாரிகள் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்துவார்கள். 2025 ஜனவரி 1-குள் 18 வயதில் நிறைவடைவோரும் இப்போது வாக்காளர்களாக பதிவு செய்யலாம். அக்டோபர் 29 வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படும். நவம்பர் 28 வரை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 6 வெளியிடப்படும்.