நீலகிரி ஜூலை, 1
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூர் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரியின் மேற்கு பகுதிகளான கூடலூர், பந்தலூரில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து இன்றும் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.