சென்னை ஜூன், 15
ரேஷன் கடைகளில் பொருட்கள் விற்பனையின் போது வழங்கப்படும் ரசீது ஒவ்வொரு பொருளுக்கும் தமிழக அரசு மானியமாக எவ்வளவு தொகையை செலவிடுகிறது என்ற விபரத்தை உணவுத்துறை வெளியிடுகிறது. சிலர் ரேஷன் பொருட்களின் மதிப்பு தெரியாமல் கடை ஊழியர்களை எடுத்துக் கொள்ளுமாறு கூறுவதால் தான், பல முறைகேடு நடக்கிறது. இதனால் பொருட்களை விற்கும் போது ரசீதில் பொருட்களின் தொகை உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.