செஞ்சி ஏப்ரல், 6
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் வார சந்தை ஆட்டு விற்பனைக்கு மிகவும் பெயர் போனது. இப்பகுதியில் ஆடுகள் மலைகளில் உள்ள மூலிகை இலைகளை தின்று வளர்வதால் இப்பகுதி ஆடுகள் நன்றாக இருக்கும் என வெளியூர் வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம்.
வழக்கம் போல் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நேற்று நடந்த வார சந்தையில் ஆடுகள் விற்பனையானது கடந்த காலங்களை போல் இல்லாமல் அமோகமாக நடைபெற்றது. நேற்று மற்றும் ரூபாய் 2 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையானது என வியாபாரி ஒருவர் மகிழ்வுடன் தெரிவித்தார்.