காஞ்சிபுரம் பிப், 24
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடந்த மாதம் 31ம் தேதி நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சரவணகுமார் இடம் மனு அளித்தனர்.
அதன் அடிப்படையில் திருநாவலூர் ஒன்றிய மேற்கு பகுதியான பதூர் கிராம எல்லையில் விசேஷ நதியின் குறுக்கே இரண்டு தடுப்பணை கட்டுவது தொடர்பாகவும், உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கரும்பு விவசாயிகள் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு சுமையை ஏற்றி செல்ல ஏதுவாகவும், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக ஷேச நதியின் குறுக்கே உயர் மட்ட பாலம் சாலைகள் அமைப்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பச்சை நிற துண்டு அணிந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு வயல்வெளியில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் வேளாண் உற்பத்தி குழு மாவட்ட தலைவர் ஜோதிராமன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.