Spread the love

மயிலாடுதுறை பிப், 24

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நாயக்கர் குப்பம் மீனவர் கிராமத்தில் கடந்த 12ம் தேதி காலை உலோகத்தால் ஆன உருளை வடிவிலான மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இப்பொருள் குறித்து அப்பகுதி மீனவர்கள் அளித்த தகவலின் பெயரில் அந்த பொருளை மீட்டு கடற்கரை பாதுகாப்பு குழும காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் நீர் மூழ்கி கப்பல்களில் பயன்படுத்தப்படும் சிக்னல் டிவைஸ் கருவி என தெரியவந்தது.

மேலும் அப்பொருளில் அபாயகரமானது, தொடாதீர்கள், காவல்துறைக்கு தெரிவியுங்கள் எனவும் அச்சிடப்பட்டிருந்தது. உடனே இப்பொருள் குறித்து சென்னை வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு நிபுணர் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அக்குழு கடற்கரைப் பகுதியில் ஆழமான குழி தோண்டப்பட்டு அதில் சிக்னஸ் டிவைஸ் கருவி வைக்கப்பட்டு வெடிகுண்டு செயல் இழப்பு செய்யும் கருவிகளுடன் இணைப்பு ஏற்படுத்தி அதனை வெடிக்க செய்து செயலிழக்க செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *