Spread the love

நெல்லை ஆகஸ்ட், 23

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அவரது 150வது பிறந்த நாளை ஒட்டி நெல்லை சந்திப்பு ம.தி.தா இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர். 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்றனர். 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கட்டுரை போட்டியும், 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கவிதை போட்டியும் நடைபெற்றது. இந்த போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் உலகநாதன் தொடங்கி வைத்தார்.

இதில் மேலாளர் சட்டநாதன் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் சொக்கலிங்கம், சோமசுந்தரம், பாடலிங்கம், பாலசுப்பிரமணியன், ராமலட்சுமி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வ.உ.சி. பிறந்த நாளான 5ம் தேதி பரிசுகள் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *