Spread the love

ராமநாதபுரம் டிச, 27

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உலகக்கல்வியுடன் முழு குரானை மனனம் செய்து முடித்த பல்வேறு ஊர்களை சேர்ந்த 20 இளம் மகளிர்கள் முழு குர்ஆனையும் மனனம் செய்து ஹாபிழ் பட்டம்பெறும் பிரமாண்டமான அதாயி ஹிஃப்ழ் பட்டமளிப்பு விழா ஒரு மாநாடு போன்று அழகிய நிகழ்வு நடைபெற்றது.

அதாயி கல்வி குழுமத்தின் தலைவர் AM முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி தலைமையில் கீழக்கரை மற்றும் சென்னை அதாயி பெண்கள் ஹிப்ஸ் பள்ளியின் தலைவரும் துபாய் ஈமான் தமிழ் சமூக அமைப்பின் தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லா கான் அழைப்பின் மகிழ்வில் கீழக்கரை அதாயி ஆண்கள் இஸ்லாமிக் பள்ளியின் தலைவர் AJ ஜெஹபர் கமால் மற்றும் ரஹ்மத் ஆயிஷா டிரஸ்ட் நிர்வாகிகள் PS மஹ்மூத் ஹுசைன், சலீம் அன்சாரி, முஹம்மது அலி, மற்றும் உஸ்வத்துன் ஹஸ்னா முஸ்லீம் சங்கம் நிர்வாகிகள், அத்தாயி குழும பேராசிரியர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக, ராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, அத்தாயி கல்வி குழுமங்களின் தலைவர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ கண்மணிகள், இதர நிர்வாகிகள், மக்கள் அறக்கட்டளை நிறுவனர் MKE உமர். அணைத்து ஜமாத் நிர்வாகிகள், பிஎஸ்எம் மருத்துவமனை நிர்வாகி அமீன், உறுப்பினர்கள் மற்றும் அத்தாயி குழும தலைமை நிர்வாகிகள், ஆலிம்கள், பல ஊர்களில் உள்ள அத்தாயி குழும மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பட்டம்பெறும் ஹாபிழ்களின் பெற்றோர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. மேலும் இக்கல்வி குழுமத்தில் படித்த மாணவர்களில் வழக்கறிஞராகவும், காவல் துறையினராகவும் மற்றும் ஐஏஎஸ் தேர்வு எழுதிக் கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் கீழக்கரையில் இருந்து நான்கு மாணவிகள் ஹாபிழ் பட்டம்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

M.நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.

அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *