துபாய் டிச, 4
ஐக்கிய அரபு அமீரகத்தின் 52வது தேசிய தினத்தை கொண்டாடும் விதமாக அமீரகத்தில் வசிக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்தவர்கள் (KEO) தனது குடுமபத்தினருடன் துபாயில் உள்ள சபீல் பூங்காவில் ஒன்றுக்கூடி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
இக்கொண்டாட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள், திறன்களை ஊக்குவிக்கும் விதமான கேள்வி பதில்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தார்கள்.
இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கேப்டன் டிவி முதன்மை நிருபர் கேவிஎல் கமால், தினகுரல் தேசிய தமிழ் நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழ் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, கலனி மொஹைதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் தலைவர் நூருல் ஹக் செயலாளர் நாசர் பொருளாளர் ஷேக் இப்ராஹிம் கௌரவ ஆலோசகர்கள் ரபீக், தாஹிர் அலி மற்றும் அமீர் அம்சா, ஜமால் உள்ளிட்ட ஊர் உறவுகள் கலந்து கொண்டனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.
Asalamualikum brother’s I’m Indian tamilnadu I’m now dubai i have dubai automatic car driving licence . I need job . Cleaning packing helpers any job please help me my WhatsApp number 0581642080
Any job no problem . All my Indian brother’s please help me