பாகிஸ்தான் நவ, 27
2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. ஆனால் 2008 ம் ஆண்டுக்குப் பின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை. இது குறித்து ஐசிசி இடம் முறையிட்டிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், “இந்திய அணியின் போட்டிகள் வேறு நாட்டிற்கு மாற்றப்பட்டால் எங்களுக்கு இழப்பீடு தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.