திருச்சி நவ, 26
கார்த்திகை தீபத்திருநாளில் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் வருடம் தோறும் மகாதீபம் ஏற்றுவது வழக்கம் இன்று கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு உச்சிப்பிள்ளையார் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக ஏற்கனவே தீபத்திரியை தயாரிக்கும் பணியில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 300 மீட்டர் நீளம் உள்ள திரிகள் தயாரிக்கப்பட்டன. துணி நூல்கள் வைக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அதனை உருண்டையாக வடிவமைத்து அதனை கட்டி ஒவ்வொன்றாக அடக்கி பெரிய துணிகள் வைத்து அதை கட்டினர்.
பின்னர் உச்சிப் பிள்ளையார் கோவிலின் மேல் அமைக்கப்பட்டுள்ள தீபம் ஏற்றும் இடத்தில் அதை வைத்தனர். தீபம் ஏற்றுவதற்கான கொப்பறையில் சுமார் 700 லிட்டர் இலுப்பை எண்ணெய் நல்லெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு வகையான எண்ணெய்கள் ஊற்றப்பட்டன. ஒரு வாரத்திற்கு மேலாக அந்த எண்ணெயில் திரிகள் ஊற வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. தமிழகத்தில் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பின்னர் இங்கு தீபம் ஏற்றப்படும் இதற்கான பணிகளை கோவில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள்