துபாய் அக், 30
ஐக்கிய அரபு அமீரக துபாயில் கிரீன் குளோப் நிறுவனம் அல் ஹுதா குழந்தைகள் திறன் மேம்பாட்டு மையம் (சுலோக்சனா வீரகுமார்) மற்றும் வீ கேர் மருத்துவ மையம் ஆகியவற்றின் ஆதரவுடன் துபாய் அல்குஸ் பகுதியில் உள்ளது தீவ்வால் பள்ளிக்கூட உள்ளரங்கில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி க்ரீன் குளோப் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் ஜாஸ்மீன் தலைமையில் அல்மாஷா ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு கௌரவ விருந்தினராக இந்திய துணை தூதராக அதிகாரி ஜீதேந்திரா, டாக்டர் ஹுசைஃபா இப்ராஹிம், மெஜாஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் சிஇஓ டாக்டர் கபீர், ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினராக வீ கேர் டாக்டர். மஜீதா, ரைசிங் ஸ்டார் நிறுவனர் வீணா, கேப்டன் டிவி முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், வணக்கம் பாரதம் வார இதழின் இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா, மரியம் அப்துல் ரஹ்மான், முத்தமிழ் சங்கம் நிர்வாகிகள் ராமகிருஷ்ண , ஷா, ஷாஹுல் ஹமீத், கல்ப் கட்ஸ் பிரவீன் ஜாய், மக்கா பார்மசி நிர்வாகி, அல் சபா ரேடியோலஜி நிர்வாகி டோக்யோ ஹரி, லீப் sports ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டார் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் வீ கேர் மருத்துமனையின் பொது மருத்துவர் டாக்டர் மஜீதா மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும், ஆரம்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துரைத்தார், மேலும் மார்பகப் புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் எவ்வாறு சுயமாக கண்டறிதல் என்பது பற்றி விரிவாக விளக்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக லாபிங் கிளப் நிர்வாகிகள் சமீர், எஸ்பிஎஸ் நிஜாம், மீடியா அஸ்கர் கமால் உள்ளிட்டோர் மேலும் தன்னார்வலர்களாக நபாஹ் அல் எமராத் குழுவினர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
மார்பக புற்றுநோயானது பெண்களில் மிகவும் கண்டறியப்பட்ட புற்றுநோயாகும், மேலும் இது பெண்களிடையே மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணமாகும். இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முக்கிய முயற்சியாக இருந்தது. இது ஒரு வெற்றிகரமான நிகழ்வாக இருந்ததில் பெருமிதம் கொள்கிறோம் என்று அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜாஸ்மீன் கூறி நிகச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மேலும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெரிவித்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.