மலேசியா அக், 14
மலேசிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நடப்பு அரசியல் பிரச்சினை, பட்ஜெட் தொடர்பாக பேசிய அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. “இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லதரசு” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, அதற்கான விளக்கத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கினார்.