செப், 28
பெரும்பாலும் விதையில்லாத பழங்களே உலர்ந்த பழங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சிலர் உலர்ந்த பழங்கள் ஆரோக்கியமானது மற்றும் சத்தானது என கூறுகின்றனர். அதே சமயம் சிலர் அவை தீங்கானது என்கின்றனர். ஆனால் உண்மையில் அவற்றில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. அவை உடலுக்கு ஆரோக்கியம் தருகின்றன.
உலர்ந்த பழங்கள் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. மேலும் இது தொற்றுநோய்களுக்கு எதிராக ஒரு தடையை உருவாக்கி நம்மை பாதுக்காக்கிறது. பொட்டாசியம், இரும்பு, ஃபோலெட், கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த இந்த உலர்ந்த பழங்கள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொண்ட பழமாக பார்க்கப்படுகிறது. மேலும் அவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மேலும் உதவுகிறது.
எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு உலர்ந்த பழங்கள் உதவி புரிகின்றன. எடை இழப்பை பொறுத்தவரை அதற்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக உணவு உள்ளது என்பதை நாம் அறிவோம். உலர்ந்த பழங்கள் எடை இழப்பிற்கு அதிகமாக உதவுகிறது. உலர்ந்த ஆப்ரிகாட், பேரிட்சை, ப்ரோன்ஸ் மற்றும் திராட்சை ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் பசியை கட்டுப்படுத்த முடியும். இதனால் நீங்கள் எடை குறைய இது உதவுகிறது.
உலகெங்கிலும் இறப்பை ஏற்படுத்துவதில் இதய நோய்களுக்கு முக்கிய பங்குண்டு. எனவே உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக முக்கியமாகும். திராட்சை போன்ற உலர்ந்த பழங்களில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்து கலவைகள் உள்ளன. அவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது உடல் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. இந்த காரணிகளால் இது இதய நோய்கள் உருவாகும் அபாயத்தை சரி செய்ய உதவுகிறது. ஆனால் சர்க்கரையுடன் உலர் பழங்களை சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
நீரிழிவு என்பது உலகில் அதிகமான அளவு மக்களிடம் காணப்படும் நோய்களில் ஒன்றாகும். இந்த நோயை பொருத்தவரை உணவு பழக்கமே இதற்கு முக்கிய பங்களிக்கிறது. உலர்ந்த பழங்களை அளவோடு உட்கொள்ளும்போது இவை உடலில் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. இந்த உலர்ந்த பழங்களில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இது இன்சுலின் அளவை மேம்படுத்த உதவுகிறது. மேலும் கணையத்தில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் வீக்கத்தையும் தடுக்கிறது. இருப்பினும் நீரிழிவு நோயாளிகள் இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.
மலச்சிக்கல் என்பது குடல் அசைவுகள் குறைவான அளவில் நிகழும்போது ஏற்படும் பிரச்சனையாகும். தேவையான அளவு ஃபைபரை உட்கொள்வதால் இதை சரி செய்ய முடியும். இது உடலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது. பிஸ்தா, பேரீச்சைகள் மற்றும் கொடி முந்திரி ஆகியவை குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் மல சிக்கலை சரி செய்யவும் உதவுகின்றன. இதனால் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இவை உதவுகின்றன.
இரத்த சோகை அல்லது இரும்புச்சத்து குறைபாடு என்பது உலக மக்களிடையே அதிகமாக இருக்கும் பிரச்சனையாகும். குறிப்பாக மாதவிடாயில் ஏற்படும் இரத்தப்போக்கு காரணமாக இந்த பிரச்சனை பெண்களிடம் அதிகமாக உள்ளது. இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கடுமையான சோர்வு, கர்ப்பத்தில் சிக்கல்கள், இதய பிரச்சனைகள் மற்றும் கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டு அவை இறப்பிற்கு கூட வழி வகுக்கும். திராட்சை, பேரீச்சை மற்றும் அப்ரிகோட்ஸ் போன்ற உலர்ந்த பழங்களில் இரும்புச்சத்து, நார்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுவதால் அவை இரத்தசோகையை சரி செய்ய உதவுகின்றன. இவற்றில் வைட்டமின் பி மற்றும் பாஸ்பரஸ் மற்றும் செம்பு போன்ற தாதுக்கள் உள்ளன. அவை இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்த உதவுகின்றன.