சென்னை ஜூலை, 27
போலி மருந்துகளை தடுக்கும் வகையில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இதய நோய் உள்ளிட்ட உயிர் காக்கும் 300 மருந்துகளின் அட்டைகளில் பிரத்யோகமான க்யூ ஆர் கோடு அல்லது பார்கோடு அச்சிடும் முறையை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. அட்டைகளில் உள்ள கியூ ஆர் கோட்டை ஸ்கேன் செய்யும் போது மருந்துகளின் உட்கூறுகள் விபரம், தயாரிப்பாளர் விபரம், உற்பத்தி காலாவதி தேதி உட்பட அனைத்து விபரங்களையும் அறிய முடியும்.