கஜகஸ்தான் ஜூன், 11
பட்யபவப்ஸ்கை வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீயால் 60,000 ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகி உள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு, ராணுவம், பேரிடர் மீட்பு குழுவினர் என பலர் களமிறக்கப்பட்டுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் துரிதமாக நடைபெற்று வருகிறது. காட்டுத் தீயில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.