தர்மபுரி ஆகஸ்ட், 16
குண்டலப்பட்டியில் உள்ள வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் 75வது சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு கல்லூரி தலைவர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த விழாவில் கல்லூரி செயலாளர் மாதவன், இயக்குனர் தங்கராஜ், கல்லூரி முதல்வர் மாரிமுத்து, இயக்குனர் சிவகுமார், சிவகுமார், நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ,மாணவிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.