அரியலூர் ஜூன், 11
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காவல் துறை ஆய்வாளர் திருவேங்கடம் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் புகையிலை மற்றும் குட்கா விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடரந்து அங்கு விசாரணை நடத்த சென்றபோது த.குடிகாடு கீழத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரவி(வயது 52)என்பவர் காவல்துறையினரை கண்டு ஓட முயன்றுள்ளார், அவரை பிடித்து விசாரணை செய்த போது 15 வயது சிறுவர்களுக்கு புகையிலை மற்றும் குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ரவியை கைது செய்துஅவர் விற்பனைக்காக வைத்திருந்த 6.5 கிலோ புகையிலை, 2.3 கிலோ குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு 6 ஆயிரம் ரூபாய் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.