சென்னை ஏப்ரல், 12
ஜாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள ஊர்களுக்கு பரிசு திட்டமாக ரூ 10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டிய முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தில் இந்தாண்டு 37 கிராமங்கள் தேர்வாகியுள்ளதாக அறிவித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை கூட்டத்தில் உரையாற்றிய அவர், சுயமரியாதை சமதர்ம சமுதாயத்தை உருவாக்க நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் தீண்டாமைக்கு எதிராக ஜனவரியில் மனித நேய வார விழா நடத்தப்படும் என அறிவித்தார்.