Spread the love

கோவை மார்ச், 16

கோவை மாவட்டத்தில் 2-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவியது. இந்த கொரோனா பரவல் அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி இன்று முதல் கோவை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *