புதுடெல்லி பிப், 11
முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5ல் நடைபெறும் என மத்திய அமைச்சர் மன்சுக்கு மாண்டவியா தெரிவித்துள்ளார். மக்களவையில் நீட் தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை எழுந்த நிலையில் மார்ச் 5ல் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது ஐந்து மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. சில தேர்வுகள் தாமதமாக நடத்தப்பட்டன. இப்போது இதையும் தள்ளி வைத்தால் அதே சூழல் ஏற்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.