Spread the love

சென்னை ஆகஸ்ட், 12

இந்தியாவின் 75 ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 2022ம் ஆண்டு ஜூலை 15 ம் நாள் பள்ளி (6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை) மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மாநில அளவிலான கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டது.

பள்ளி அளவிலான மாணவர்களுக்கான கட்டுரைத் தலைப்பு “நான் விரும்பும் சுதந்திரப் போராட்ட வீரர்” (தமிழ்), “My favourite Freedom Fighter” (ஆங்கிலம்). கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவிலான மாணவர்களுக்கான கட்டுரைத் தலைப்பு “2047-ல் இந்தியா” (தமிழ்) “India by 2047” (ஆங்கிலம்) என்றும் அளிக்கப்பட்டிருந்தன.

இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பலநூறு மாணவர்கள் கட்டுரைகளை எழுதியனுப்பியிருந்தனர். அக்கட்டுரைகளை மதிப்பிட்ட வல்லுநர் குழு இந்தப் போட்டிக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாகவும், வரப்பெற்ற கட்டுரைகள் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும், உயர்தரமாகவும் இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளனர். வல்லுநர் குழு பரிந்துரையின்படி வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கல்லூரி அளவிலான போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.100000, ரூ.75000 மற்றும் ரூ. 50000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். பள்ளி அளவிலான போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.75000, ரூ. 50000 மற்றும் ரூ. 25000 வழங்கப்படும்.

மேலும் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *