நெல்லை ஜன, 4
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவையொட்டி இன்று பாளை பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்க குமார், கவி பாண்டியன், பரணி இசக்கி, வக்கீல் அணி துணைத்தலைவர் மகேந்திரன், மண்டல தலைவர் ராஜேந்திரன், சின்ன பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அ.ம.மு.க.சார்பில் நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ஆவின் அண்ணா சாமி, அவைத்தலைவர் பாஸ்கர் சகாயம், பொருளாளர் ரமேஷ், பகுதி செயலாளர் விக்டர் சாமுவேல், அசன் கான் மற்றும் நிர்வாகிகள் ஞானராஜ், வைகுண்ட ராஜா, சீனி குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட பாரதியஜனதா சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் மகாராஜன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் பேராட்சி செல்வம், யோகா ஆறுமுகம், கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நெல்லை ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.