சென்னை டிச, 28
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ஸிஜன் இருப்பு டேங்குகளில் 80 சதவீதம் நிரப்பி வைக்க அனைத்து அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அறிவித்து அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 486 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யவும், 1,546 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சேமிக்கவும் வசதிகள் உள்ளது. தற்போது தினமும் 65 மெட்ரிக் டன் மட்டும் தேவைப்படுவதால் இருப்பை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.