ராணிப்பேட்டை டிச, 27
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார்.
இக்கூட்டத்தில் துணை ஆட்சியர் தாரகேஸ்வரி, கலால் உதவி ஆணையர் சத்திய பிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.